Tuesday, February 3, 2009

ஈழத்து கூத்து மீட்டுருவாக்கத்தின் பிதாமகன்


2004ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவுப் பேருரையும் அரங்க அளிக்கையும் நடைபெற்றன. இதனை பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவு அறக்கட்டளை ஒழுங்க செய்து நடத்தியிருந்தது.
குழந்தை ம.சண்முலிங்கம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நினைவுப் பேருரையை பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அரங்க அளிக்கையாக வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குவினரின் கீசகன் வதை வடமோடி நாட்டுக் கூத்து இடம்பெற்றது. இக்கூத்தில் இளைஞர்கள் ஆடியிருந்தனர். இளம் தலைமுறையிடம் கூத்துக் கையளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. அன்றைய ஆற்றுகை, பாடல், ஆடல், நடிப்பு, ஒப்பனை போன்ற பலவற்றிலும் செழிமை, தேர்ச்சி வேண்டி நின்றது.
ஈழத் தமிழ் அரங்க வரலாற்றில் வித்தியானந்தனின் கூத்துப் புத்தாக்கப் பணி முக்கியமானது. சிங்கள அரங்கில் பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரா மேற்கொண்ட அரங்கள் பணிகளால் உந்தப்பட்டு பேராசிரியர் சு.வித்தியானந்தன் தமிழர் பாரம்பரிய அரங்காக நாட்டுக் கூத்தை இனங்காட்டி அதனை ஒரு மதிப்பு மிக்க கலையாக மத்தியதர மக்கள் மத்தியிலும் பல்கலைக்கழக மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் புது மெருகுடன் அறிமுகம் செய்தார். கிராமங்களில் மக்களோடு மக்களாகக் கிராமியக் குணங்களோடு காணப்பட்ட நாட்டுக் கூத்துக்களை நவீன அரங்க எண்ணக்கருக்களை உள்வாங்கி மெருகூட்டினர். இவரது, முயற்சிக்கு வந்தாறுமூலை செல்லையா அண்ணாவியார் துணையாக இருந்திருக்கிறார். பேராசிரியரின் அரங்கப் பணிணைப் பாராட்டுகின்றபோது செல்லையா அண்ணாவியாரை நினைவில் கொள்ளுதல் அவசியமாகிறது.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் தயாரித்த கூத்துக்களில் நடித்துப் பலர் இன்றும் அரங்கத்துறைக்கு ஆர்வத்துடன் பங்களித்து வருகின்றார்கள். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா, பேராசிரியர் சி.மௌனகுரு போன்றோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் தயாரித்த இராவணேசன் கூத்து அறுபதுகளில் மிக வரவேற்பைப் பெற்ற கூத்தாகும். இத்தோடு பல கூத்து எழுத்துருக்களை நூல் வடிவில் கொண்டு வந்திருக்கிறார். இராம நாடகம், அனுருத்த நாடகம், வானபீமன் நாடகம் என்பன இவரது முயற்சியால் நூல் வடிவம் பெற்றவை.
பாரம்பரியமாக வட்டக்களரியில் உரத்துக் கத்தி, பாடி, ஆடி வந்த கூத்தை ஒரு பக்கப் பார்வையாளர்களுக்காக படச்சட்ட மேடைக்கேற்றதாக வடிவமைத்து இன்று வரை கூத்துக்கள் நின்று நிலைக்க வழிவகுத்த பேராசிரியரின் முயற்சியை ஆய்வுக்குட்படுத்தி அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் செல்லாது அவரது பணியை தேய்வு பெறுமானத்திற்கு இட்டுச் செல்ல வழிவகுத்த எமது அரங்க வரலாற்றை எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது. இன்று கூத்து ஆடுவதும் தயாரிப்பதும் மிகமிகக் குறைந்து விட்டது. கூத்துக்கள் அழிந்து செல்கின்றன. பல அண்ணாவிமார் தம் கலையைக் கையளிக்காது இறந்து போனார்கள். கூத்துக் கலையைக் காப்பதற்கான முயற்சியில் எவரும் தொட்ச்சியாக முழு ஈடுபாட்டுடன் செயற்படத் தயாராக இல்லை. இந்நிலையில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவு அறக்கட்டளை சார்ந்த பெரியோர் அவரது முயற்சியை அறிவுநிலை நின்றும் அரங்க நிலை நின்றும் நகர்த்திச் செல்ல ஆவண செய்ய வேண்டும்.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரையும் அரங்க அளிக்கையும்2004ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவுப் பேருரையும் அரங்க அளிக்கையும் நடைபெற்றன. இதனை பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவு அறக்கட்டளை ஒழுங்க செய்து நடத்தியிருந்தது.
குழந்தை ம.சண்முலிங்கம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நினைவுப் பேருரையை பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அரங்க அளிக்கையாக வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குவினரின் கீசகன் வதை வடமோடி நாட்டுக் கூத்து இடம்பெற்றது. இக்கூத்தில் இளைஞர்கள் ஆடியிருந்தனர். இளம் தலைமுறையிடம் கூத்துக் கையளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. அன்றைய ஆற்றுகை, பாடல், ஆடல், நடிப்பு, ஒப்பனை போன்ற பலவற்றிலும் செழிமை, தேர்ச்சி வேண்டி நின்றது.
ஈழத் தமிழ் அரங்க வரலாற்றில் வித்தியானந்தனின் கூத்துப் புத்தாக்கப் பணி முக்கியமானது. சிங்கள அரங்கில் பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரா மேற்கொண்ட அரங்கள் பணிகளால் உந்தப்பட்டு பேராசிரியர் சு.வித்தியானந்தன் தமிழர் பாரம்பரிய அரங்காக நாட்டுக் கூத்தை இனங்காட்டி அதனை ஒரு மதிப்பு மிக்க கலையாக மத்தியதர மக்கள் மத்தியிலும் பல்கலைக்கழக மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் புது மெருகுடன் அறிமுகம் செய்தார். கிராமங்களில் மக்களோடு மக்களாகக் கிராமியக் குணங்களோடு காணப்பட்ட நாட்டுக் கூத்துக்களை நவீன அரங்க எண்ணக்கருக்களை உள்வாங்கி மெருகூட்டினர். இவரது, முயற்சிக்கு வந்தாறுமூலை செல்லையா அண்ணாவியார் துணையாக இருந்திருக்கிறார். பேராசிரியரின் அரங்கப் பணிணைப் பாராட்டுகின்றபோது செல்லையா அண்ணாவியாரை நினைவில் கொள்ளுதல் அவசியமாகிறது.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் தயாரித்த கூத்துக்களில் நடித்துப் பலர் இன்றும் அரங்கத்துறைக்கு ஆர்வத்துடன் பங்களித்து வருகின்றார்கள். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா, பேராசிரியர் சி.மௌனகுரு போன்றோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் தயாரித்த இராவணேசன் கூத்து அறுபதுகளில் மிக வரவேற்பைப் பெற்ற கூத்தாகும். இத்தோடு பல கூத்து எழுத்துருக்களை நூல் வடிவில் கொண்டு வந்திருக்கிறார். இராம நாடகம், அனுருத்த நாடகம், வானபீமன் நாடகம் என்பன இவரது முயற்சியால் நூல் வடிவம் பெற்றவை.
பாரம்பரியமாக வட்டக்களரியில் உரத்துக் கத்தி, பாடி, ஆடி வந்த கூத்தை ஒரு பக்கப் பார்வையாளர்களுக்காக படச்சட்ட மேடைக்கேற்றதாக வடிவமைத்து இன்று வரை கூத்துக்கள் நின்று நிலைக்க வழிவகுத்த பேராசிரியரின் முயற்சியை ஆய்வுக்குட்படுத்தி அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் செல்லாது அவரது பணியை தேய்வு பெறுமானத்திற்கு இட்டுச் செல்ல வழிவகுத்த எமது அரங்க வரலாற்றை எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது. இன்று கூத்து ஆடுவதும் தயாரிப்பதும் மிகமிகக் குறைந்து விட்டது. கூத்துக்கள் அழிந்து செல்கின்றன. பல அண்ணாவிமார் தம் கலையைக் கையளிக்காது இறந்து போனார்கள். கூத்துக் கலையைக் காப்பதற்கான முயற்சியில் எவரும் தொட்ச்சியாக முழு ஈடுபாட்டுடன் செயற்படத் தயாராக இல்லை. இந்நிலையில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவு அறக்கட்டளை சார்ந்த பெரியோர் அவரது முயற்சியை அறிவுநிலை நின்றும் அரங்க நிலை நின்றும் நகர்த்திச் செல்ல ஆவண செய்ய வேண்டும்.

1 comment:

  1. 1xBet Korean Betting Sites and Sportsbooks | Sports Betting 2021
    Bet on 1xBet in South Africa. You can use your own funds in the bet and receive cash back. If you do not make a profit, зеркало 1xbet you can use these funds to get

    ReplyDelete